முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான செயலணியின் வேலைத்திட்டங்களின் முதலாவதாக வீடமைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று காலை 1 0 மணிக்கு நீராவிப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொன்றும் சுமார் 8 இலட்சம் பெறுமதியான 128 குடும்பங்களுக்கான வீடமைப்புத்திட்டத்துக்கான முத்ற்க்கட்ட நிதிவழங்கும் இந்நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு வீட்டுத்திட்டத்திர்க்கான முதலாவது கட்ட நிதி வழங்கிவைக்கப்பட்டது.