பன்னல – கிரிஹுல்ல – கொஸ்கஹ சந்தியில் வேன் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து உந்துருளியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் , உந்துருளியில் பயணித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பன்னல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் வாகனத்தின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ள நிலையில் எதிர்திசையில் வந்த உந்துருளியில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
63 வயதுடைய கணவரும் , 58 வயதுடைய மனைவியுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மாகந்துர – கோனவில பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.