ஆதன விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் 90 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலையை சேர்ந்த 34 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

