இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்குக – தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

239 0

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு குறித்து அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 42 படகுகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தமைக்கு பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் நாளைய தினம் இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தவல் வெளியிட்டுள்ளன.

Leave a comment