இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையின் தேசிய காவல்துறை ஆணைக் குழுவிற்கு 600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளில் 40 சதவீதமானவற்றிற்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் காவற்துறையின் செயற்பாடுகள் குறித்து ஆயிரத்து 800 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.