அடைக்கலம் கோரிய இலங்கை தமிழர் சிறையில் அடைக்கப்பட்டார்.

730 0

201608061706544053_32-arrested-tamil-labours-remanded-to-custody-till-august-19_SECVPF.gifசெக் குடியரசில் அரசியல் அடைக்கலம் கோரும் நோக்கில் ப்ராக் வானுர்தி தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் அந்த நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் தாம் இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக தெரிவித்து கடந்த வருடம் செக் குடியரசை நோக்கி சென்றுள்ளார்.
எனினும் அவர் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தமது நாட்டுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தி செக் குடியரசின் காவற்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி அவரை சிறைவைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அவர் சிறையிலிருந்து அரசியல் அடைக்கலத்திற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதாக செக் குடியரசின் த டெய்லி ரைட்ஸ் செய்தி தாள் தெரிவித்துள்ளது.