இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்.

697 0

09THREFUGEES_831446f-720x480தமிழகத்தில் தங்கியிருந்த ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள அகதி முகாம்களில் வசித்து வந்த சுமார் 75 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட வானுர்தி தள குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.