இலங்கை மேலும் அதிக சீன முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன செய்தி ஸ்தாபனமான ஸின் ஹுஹாவுக்கு இந்தக் கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலம் முதல், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக உறுதியான உறவு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து, மேலதிக சீன முதலீட்டினை பெறக்கூடிய ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.