பொலிசார் மீது தாக்குதல் எதிரொலி!! வடமராட்சி சுற்றி வளைக்கப்பட்டு இருவர் இழுத்தச் செல்லப்பட்டனர்!!

291 0

தமிழ் பொலிஸ் அதி­காரி மீது தாக்­கு­தல் மேற்­கொண்­டமை, சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி வட­ம­ராட்­சி­யில் பொலி­ஸார் சிறப்­புத் தேடு­தலை நேற்று மேற்­கொண்­ட­னர். இதன்­போது இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் தமிழ் பொலிஸ் அதி­காரி மீது நேற்று முன்­தி­னம் இரவு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த மாதம் 9ஆம் திகதி பொலி­ஸார் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தில் இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து ஏற்­பட்ட பதற்ற நிலை­யின் போது பொலிஸ் காவ­ல­ரண்­கள், பொலிஸ் வாக­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இவற்­று­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­கள் சில­ரைப் பொலி­ஸார் இனம் கண்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளைத் தேடி, இரண்டு பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. வட­ம­ராட்­சி­யில் குறிப்­பாக துன்­னா­லைப் பகு­தி­யில் தேடு­தல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­போது இரு­வர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

Leave a comment