ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் நிறைவு

212 0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற வாக்கெடுப்பு சீர்த்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் இடம்பெறும் தினத்தை தேர்தல் ஆனைக்குழு தலைவர் அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment