அர்ஜூன் அலோசியஸின் அப்பிள் அலைபேசியின் தகவல்களை வழங்குமாறு உத்தரவு

279 0

பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் 2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் பயன்படுத்திய அப்பிள் கையடக்க தொலைபேசியின் கடவுச்சொல் மற்றும் அதன் பயனர்பெயரையும் வழங்குமாறு சர்ச்சைக்குரிய பிணை முறை விநியோகம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு அர்ஜூன் அலோசியஸ் நிராகரித்ததன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் ஊடாக கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து ஆதரங்களும் சட்டவிரோதமானவை என பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆதரங்களை சேகரிப்பதற்காக ஜனாதிபதியால் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அவர்களது வாதமாக இருந்தது.

Leave a comment