7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு

239 0
 சட்டவிரோதமாக பணியாற்றிவந்த சுமார் 7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இலங்கைத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
15 வருடங்களுக்கு மேலாக அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றி வந்த பலருக்கும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிலருக்கு 50 சதவீதமான வேதனம் அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் லெபனானுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்டகால பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment