நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் – மாயாவதி விமர்சனம் 

297 0

பெரும் கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
இதையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.

நிதிஷின் இந்த முடிவை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் அந்த வரிசையில் மாயாவதியும் இணைந்துள்ளார்.

Leave a comment