வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்றுள்ள, ‘வந்தே மாதரம்’ பாடலை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒருமுறையேனும் பாட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியல்ல.
இந்திய மக்களின் ஒற்றுமை மேலும் சிதைக்கவே உதவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கருதுகிறது.
பன்மைத்தன்மை கொண்ட சமூக இணக்கத்தின் மீது விழுந்த பேரிடியாகவே கருத வேண்டியுள்ளது.
வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பற்றிய வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது வழக்கிற்கு சம்பந்தமில்லாத விடயமாகும்.
இந்தத் தீர்ப்பு, ஏற்கெனவே சமுதாயத்தில் பிளவையும், விரோதத்தையும் விதைப்பவர்களுக்கு பெரும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்றே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

