சைப்பிரஸில் அகதி அந்தஸ்த்து கோரும் இலங்கையர்கள்

348 0

சைப்பிரஸில் ஐந்து இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் குடிப்பெயர்வுக்கு எதிரான அமைப்பொன்றில் பயிற்சிப் பெறுவதற்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றின் விசா காலம் நிறைவடைந்துள்ளது.

அவர்கள் குறித்த அமைப்புடன் கப்பல் ஒன்றில் இத்தாலி நோக்கி சென்ற வேளையில், இலங்கையர்களால் ஏற்பட்ட வீசா பிரச்சினையின் காரணமாக சைப்பரஸில் தடுக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், ஐந்து இலங்கையர்கள் மாத்திரம் அகதி அந்தஸ்த்து கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சார்பில் வடக்கு சைப்ரஸில் சட்டத்தரணி ஒருவரும் முன்னிலையாக முன்வந்துள்ளார்.

Leave a comment