நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி பணிப்பாளர் பிரதீப்பு கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வறட்சியின் காரணமாக நீர்மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.