நாட்டின் சொத்துக்களை விற்றவர் மஹிந்த

234 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஸ அரச சொத்துக்களை தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி விற்றுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த செங்கிரில்லா ஹோட்டல் அமைப்பதற்கு  6 ஏக்கர் நிலப்பரப்பினையும்,துறைமுக நகரத்திற்காக 240 ஏக்கர் நிலப்பரப்பினையும் சீனாவுக்கு விற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பில் சீனாவுடன் பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து குறித்த ஒப்பந்தத்தை
கைச்சாத்திடும் இறுதிக்கட்டத்தை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இது தொடர்பில் இன்று கூச்சலிடுபவர்கள் அன்று வாய்த்திறக்கவில்லை என்றும் அமைச்சர் திசாநாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன் எரிபொருள் பணியாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் நாங்கள் உடன்படவில்லை என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment