கினிகத்தேனவில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

395 0

தூரியன் பழத்தை பதுகாக்க போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். 

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய ஹிட்டிகேகம, புலத்தவத்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தயான வை. குலரத்ன என்பவரே இன்று காலை 6 .30 மணியளவில் மின்சாரம் தாக்கி இவ்வாறு பலியானார்.

தூரியன் தோட்டத்தில் தூரியனை கள்வர்களிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தை சுற்றி மின்சார கம்பி வேலியமைத்திருந்த தோட்ட உரிமையாளரின் அயல் வீட்டை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் குடிநீர் வராத நிலையில் அத்தோட்ட பகுதிக்கு நீர் குழாயை திருத்த சென்றவேளை மின்சார கம்பியில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்த தோட்ட உரிமையாளரை கைது செய்ததுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment