அத்தனகலை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட கைதி ஒருவர், காவல்துறையினரின் காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்படி அவர் மீண்டும் விளக்கமறியலுக்கு கொண்டுச் சென்ற வழியிலேயே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.