நாட்டை முடக்கும் செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள ஜனநாயக சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் சிறப்பு உரை ஆற்றினார்.
அதன்போதே இதனைக் குறிப்பிட்டார்.

