அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும் – சக்திவேல்

203 0

நாட்டில் தற்போது அரசியல் கைதிகள் இல்லை என்று அரசாங்கம் கூறுவது தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்புஇ நல்லை ஆதீன குரு முதல்வரைஇ நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடியது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அருட்தந்தை மா.சக்திவேல் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டுஇ அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் கைதிகளுக்குத் தண்டனை கொடுக்க நினைப்பதைஇ தமிழ் மக்களின் அரசியலுக்குக் கொடுக்கும் தண்டனையாக நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment