வாக்குறுதியை மீறிவிட்டார் இராஜாங்க அமைச்சர் – இரணைதீவு மக்கள்

199 0

உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்துச் சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒரு மாத காலமாகியும் உரிய பதிலை வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி கடந்த மே மாதம் முதலாம் திகதியில் இருந்து முதல் முழங்காவில் இரணைமாதா நகரில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி அங்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் உரிய பதிலை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒரு மாத காலமாகியும் தமக்கான பதிலை அவர் வழங்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment