மொழி தேவை குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல்

298 0

president-visit-orgodawatha005-610x366நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தெரிவித்துள்ளார்.

ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழ மோதலை அடுத்து, அதனை மீண்டும் திறப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண பல்லைக்கழக சிங்கள மாணவர்கள் தங்களுக்கு தமிழ் மொழியை கற்பதற்காக மத்திய நிலையம் ஒன்று இல்லை என்று குறிப்பிட்டனர்.

அத்துடன், கடந்த வருடம் யாழ்ப்பாணம் சென்று பாடசலை மாணவர்களை சந்தித்த போது, அவர்கள் தமக்கு சிங்கள மொழியை கற்றுக்கொள்ள வசதி செய்து தருமாரு கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிள்ளைகளில் கேரிக்கைகளின் அடிப்படையில் மொழிகள் தொடர்பிலான பரஸ்பர புரிந்துணர்வை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.