இலங்கை கொடியை அவமதித்து தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது

202 0

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்னால் காணப்பட்ட இலங்கை கொடியை அகற்றிய சம்பவம் தொடர்பில், சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்று மாலை கைதுசெய்ததாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்த பின்னர் காவற்துறை இது தொடர்பில் விசாரணைகளை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றின் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் மாவட்ட செயலககத்தில் இருந்த இலங்கை கொடியை அகற்றி கீழே போட்டு மிதித்து விட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்த சிலர் தெரிவித்திருந்தனர்.

Leave a comment