சிங்களவர்களின் பணியில் நம்பிக்கை – சீ.வி கூறுகிறார்

235 0

நல்லூர் தாக்குதலின்போது மரணமடைந்த காவல்துறையின் சாஜன்டுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சிலாமபம் – குமாரகட்டுவயில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இவ்வாறான ஒருவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனால்தான் தாம் இவ்வளவு தூரம் வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.

காவல்துறை பணி எவ்வளவு கடினமானது என்பதை இதனூடாக அறியமுடிகின்றது.
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.

அவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமக்கு பாதுகாப்பு வழங்கும் அனைவரும் சிங்கள இனத்தவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இரண்டு பேர் பணிக்கு வந்ததாகவும், அவர்களின் பணியில் விருப்பமில்லாத காரணத்தால், அவர்களை வெளியேற்றியதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சிங்களவர்களின் பணியில் நம்பிக்கை இருப்பதால், அவர்களை பணியில் வைத்திருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment