நல்லூர் துப்பாக்கிச் சூட்டு – பிரதான சந்தேகத்துக்குரியவருக்கு  விளக்கமறியல் 

416 0

யாழ்ப்பாணம் – நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்துக்குரியவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அவர், யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி போராளி என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

39 வயதான செல்வராஜா ஜெயந்தன் என்ற குறித்த தாக்குதல் தாரி 1994ஆம் ஆண்டு தமது 16ஆவது வயதில் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்டுள்ளார்.
அவர், தற்போது தனியார் பேருந்து ஒன்றின் சாரதியாக பணியாற்றுகிறார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a comment