குப்பைகளை முத்துராஜவலயில் கொட்டுவதற்கு தடை

221 0

கொழும்பின் குப்பைகளை முத்துராஜவலயில் கொட்டுவதற்கு தடை விதித்து, உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு பிரதம நீதியர்சர் ப்ரியசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் குப்பைகள் கொழும்பு மாநகர சபை ஊடாக கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிமுதல் முத்துராஜவலயில் கொட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முத்துராஜவல பிரதேசத்தைச் சேர்ந்த 35 பேர் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment