வித்தியா வழக்கில் இரசாயண பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட பகுப்பாய்வாளர் சாட்சியம்

228 0

மனித ரத்தம் அடையாளம் காணப்பட்ட போதிலும் இந்திரியங்களை அடையாளம் காணமுடியவில்லை என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார மன்றில் சாட்சியமளித்தார். 

யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின்படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார சாட்சியமளித்தார்.

1993 ஆம் ஆண்டில் இருந்து கடமையாற்றுகின்றேன்.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

500 மேற்பட்ட மரபணு அறிக்கைகளை மரபணு அறிக்கைகளை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளேன்.

100 ற்கும் மேற்பட்ட மரபணு சாட்சியங்களை அளித்துள்ளேன். சிபி. 528/15 மற்றும் 796/16 10 ஆம் திகதி மே மாதம் 2015 ஆம் திகதி சமர்ப்பித்துள்ளேன். 3 தடவைகள் கிடைக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு யூன் மாதம் 01 ஆம் திகதிய கட்டளையின் பிரகாரம், 2015 யூன் மாதம் 03 ஆம் திகதி கிடைக்கப்பட்டது.

2015 யூன் 15 ஆம் திகதிய கட்டளையின் பிரகாரம் 2015.06.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்றாம் தடவையாக அரச சட்ட வைத்திய அதிகாரியின் சான்றுப்பொருட்கள் 2016.06.03 ஆம்திகதி கிடைக்கப்பெற்றது.

36 சான்றுப்பொருட்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உரோம மாதிரிகள், 7 வது சான்றுப்பொருள் சட்டை, 8வது கைக்குட்டை, 9 வது சப்பாத்து, 10 வது தலைப்பட்டி , 15 வது ரிபன் ஒன்று, 16 வது உள்ளாடை ஒன்று, 18 வது தனிப்பட்டி ஒன்று, 19வது உள்பாவாடை, 20 வது இடுப்பு பட்டி, 21வது மார்புக் கச்சை, 22 வது காலுறை,23வது இரத்தமாதிரிகள், 24வது ரிசேட், 25வது ரிசேட் ஒன்று, 26வது நீள காற்சட்டை, 27வது அரைக்காற்சட்டை, 28வது, சேட் ஒன்று, 29வது நகமாதிரிகள், 30வது சொக்ஸ், 31வது இரத்தமாதிரிகள், 32வது இரத்தமாதிரிகள், 33வது இரத்தமாதிரி இந்திரகுமார், 34வது இரத்தமாதிரி ஜெயக்குமார், 35வது இரத்தமாதிரி தவக்குமார், 36வது சசிதரன்; இரத்தமாதிரி, 37வது இரத்தமாதிரி சந்திரகாந்தன், 38வது இரத்தமாதிரி உசாந்தன், 40 வது இரத்தமாதிரி கோகுலன், 41வது இரத்தமாதிரி மகாலிங்கம் சசிக்குமார் போன்ற சான்றுப்பொருட்கள் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மனித இரத்த மாதிரிகளை அடையாளம் காணமுடிந்தது.விந்துக்களை அடையாளம் காணமுடியவில்லை.

எஞ்சிய மயிர்கள் தொடர்பாக எமது விஞ்ஞான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

32வது இரத்த மாதிரியும், இறந்த பெண்ணின் இரத்த மாதிரியும் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்றது.

26வது சான்றுப்பொருளான நீளக்காற்சட்டை மீது காணப்பட்ட இரத்த மாதிரிகளும், பெண்ணின் யோனியில் காணப்பட்ட இரத்த மாதிரிகளும் இறந்த பெண்ணுடையது அல்ல என்றும் முடிவாகின்றது.

பாடசாலை சீருடை கிழிந்த நிலையிலும், சேறு படிந்த நிலையிலும் காணப்பட்டது.

அதன்போது வித்தியாவின் பாடசாலை சீருடை சாட்சியிடம் காண்பிக்கப்பட்டது.

சாட்சி வித்தியாவினுடையது என்பதனை உறுதிப்படுத்தினார்.

Leave a comment