நீதிபதி இளஞ்செழியனின் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் சரணடைந்தார்

232 0

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா . இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் காவற்துறையில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment