கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை

285 0

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 13 மாணவர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளர்.

அவர்கள் புதுக்கடை நீதவானிடம் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன்இ எதிர்வரும் 28ஆம் திகதி இவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து லிப்டன் சுற்றுவட்டத்;தில் நேற்று முன்தினம் முதல் சத்தியாகிரக போராட்டதை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தியதுடன் அவர்களில் 13 பேரை கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிலையும் அங்கிருந்து அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவித்தல்இ மருத்துவ மாணவர்கள் சங்க இணைப்பாளர் ரயன் ஜெயலத்த மீதான கடத்தல் முயற்சி என்பவற்றை முன்னிலைப்படுத்திஇ மாணவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment