பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

406 0

லிப்டன் சுற்று வட்டப்பகுதியில் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர் பீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மாணவர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சத்தியா கிரக போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பேரணியாக வருகை அந்த மாணவர்கள் குறித்த பகுதியில் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தநிலையில், இன்று மாலை அந்த சத்தியா கிரக போராட்டகாரர்கள் மீது காவற்துறையினரால் நீர் பீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment