மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்வேன் – ஆந்திர முதல்வர் உருக்கம்

920 0

‘தன்னை நம்பி உள்ள மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கமாக தேரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதன்போது பல அரசு நலத்திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் தனது தொகுதி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

அதன்பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மக்களுக்கான உயிரையும் விட தயார் என குறிப்பிட்டார்.

தன்னை இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து வெற்றிப் பெற செய்து வருகிறார்கள்.

இதற்கு தன் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன் எனவும் தன்னை நம்பி உள்ள மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

Leave a comment