ரயன் ஜயலத்தின் விடயம் தொடர்பில் விசாரிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

262 0

மருத்து மாணவர்களின் செயற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைது செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 

மருத்து மாணவர்களின் செயற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை பொலிஸார் கைது செய்ய முற்பட்டிருந்த நிலையில் அது தோல்வியில் முடிவடைந்தது.

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பின்பற்றிய நடைமுறை தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சம்பவம் தொடர்பில் விஷேட உரை ஒன்றையும் அற்ற உள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

Leave a comment