நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மரணம்

5286 0

நல்லூர் பிரதேசத்தில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு கடந்த 18 வருடங்களாக நம்பிக்கைக்குரியவராக இருந்த குறித்த மெய்ப்பாதுகாவலரான, 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக யாழ். மருத்துவமனை அறிவித்துள்ளது.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

இந்தத் தாக்குதலின்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்

Leave a comment