கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 144 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை எனவே எமது வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு சொந்த நிலத்தில் கால் பாதிக்கும் வரை எமது போராட்டம் தொடருமென தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் இவர்களை வடமாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடினார்