ஜனாதிபதி எமக்கு உடனடியாக பதில்தர வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

252 0

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா?  இல்லையா?  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் காணாமலாக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் 

Leave a comment