பொதுமக்களின் காணிளில் கடற்படையினர் மரநடுகை

223 0
முள்ளிவாய்க்கால்-வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை சுவிகரித்துள்ள கடற்படையினர் அங்கே மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது கட்டுப்பாட்டடு வளாகத்தை சுற்றி நீண்ட வேலி ஒன்றை அமைத்துள்ளனர்.
குறித்த வேலியோரம் சுமார் 100க்கு மேற்பட்ட மரங்களை கடற்படையினர் நடுகைசெய்து பரமரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த மாவட்டத்தில் தொடரும் வறட்சி நிலையான சுழலில் கடற்படையினர் இவ்வாறு மரம் நட்டு பராமரிப்பது நாட்டிற்கு நல்ல விடயாமாக இருந்தாலும் எமது சொந்த நிலங்களின் சுவிகரிப்பின் நிலந்தரத்தை அவர்கள் உறுதிப்படுத்த முனைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதே வேளை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment