ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பது தொடர்பான இறுதி உடன்படிக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.
குறித்த உடன்படிக்கையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கால வரையறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.