கட்டாருக்கு இலங்கைப் பணியாளர்கள் செல்வதில் தடையில்லை

262 0

கட்டார் மீது பொருளதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள போதும்  கட்டார் அரசு நிலையாக உள்ளதாகவும்இஇதனால் இலங்கைப் பணியாளர்கள் கட்டாரிற்கு அனுப்பப்படுவது வழமையாக இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசு உறுதியான நிலையில் இருப்பதால் அங்கு ஏற்பட்ட உணவுத் தட்டுபாடு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும்இஇதனால் கட்டாரில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டார் நாட்டிற்குள் காணப்பட்ட விமான போக்குவரத்து பிரச்சினையும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும்இஎனவே இலங்கைப் பணியாளர்கள் கட்டாரிற்கு அனுப்பும் பணி வழமைப்போல் இடம்பெறுவதாகவும் பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment