விலை கூடிய மருந்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம்

253 0

நாடாளுமன்ற வைத்திய மத்தியநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரும் அதிகூடிய மருந்துகளை வழங்க வேண்டாம் என சுகாதார அமைச்சு சபாநாயகர் கருஜயசூரியவிற்கு உத்தரவிட்டுள்ளது.
வைத்தியர்களின் பரிந்துறைகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வைத்திய மத்திய நிலையத்தால் இலவசமாகவே மருந்துகள் வழங்கப்படுவதாகவும் எனினும் சில உறுப்பினர்கள் விலைக் கூடிய மருந்துகளை இலவசமாக பெற முயற்சிப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்ற வைத்திய மத்தியநிலையத்தில் விலைக் கூடிய மருந்துகளை பெற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்ட்த்தில் நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும்இகாப்புறுதி திட்டத்தின் ஊடாக குறித்த மருந்துகளிற்கான செலவினை ஈடுசெய்வதற்கான யோசனைக்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment