கைதிகளிடம் இருந்து 13 நவீன கையடக்கத்தொலைபேசிகள் மீட்பு

465 0

கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது 13 அதி நவீன கையடக்கத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்;ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும்இகொழும்பு சிறைச்சாலையின் ஜீ-01 இலக்க சிறையிலிருந்தே இவை மீட்கப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறையில் பாரிய குற்றங்கள் புரிந்த 32 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment