மின்சார பொறியியலாளர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஹொரணை – ஹோமாகம , பண்டாரகம மற்றும் அவிசாவளை பிரதேச மின்சார பொறியியலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதேச மின்சார பொறியியலாளர்களால் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அங்கொடை – அம்பதலே சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்கள் இருவர் அதன் உரிமையாளரால் நேற்றைய தினம் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.