உடரட்ட மெனிக்கே தொடரூந்து சேவை

298 0

தொடரூந்து தடம்புரண்டதன் காரணமாக ஒரு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த உடரட்ட மெனிக்கே தொடரூந்து சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5.45க்கு பதுளையிலிருந்து புறப்பட்ட உடரட்ட மெனிக்கே தொடரூந்து வழமைபோல கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்றதாக பிரதான கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி அதிகாலை கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் தொடரூந்து, கொட்டகலயில், 60 அடி பாலத்தில் தடம்புரண்டது.

இதன் காரணமாக தண்டவாளத்துக்கு மட்டுமன்றி, 60 அடி பாலத்துக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக கொழும்பு – கோட்டையில் பயணத்தை ஆரம்பிக்கும் தொடருந்துகள் ஹட்டன் வரை மட்டும் சேவையில் ஈடுபட்டது.

அங்கிருந்து கொட்டகலைவரை பேருந்துமூலம் பயணிகளை ஏற்றிச் சென்று, பின்னர் கொட்டகலையிலிருந்து பதுளைவரை மீண்டும் தொடருந்து சேவை இடம்பெற்றமை நினைவூட்டத்தக்கது.

Leave a comment