வித்தியா தொடர்புடைய வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

481 0

viththiya-2-338x600படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சி.வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் பிணை கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகத்துக்குரியவருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணியால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அடுத்த தவணை விசாரணையின் போது பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.