புதிய உள்நாட்டு வரி சட்டமூலம் எட்கா உடன்படிக்கைக்கு வழியேற்படுத்தும் ஒன்றாகும்-அநுர குமார திசாநாயக்க

257 0

புதிய உள்நாட்டு வரி சட்டமூலம் எட்கா உடன்படிக்கைக்கு வழியேற்படுத்தும் ஒன்றாகும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த வரி சட்டம் ஊடாக உள்நாட்டு தொழில்முனைவோரை விட வெளிநாட்டு தொழில்முனைவோருக்கு அதிக சந்தர்ப்பங்ளை பெற்றுக்கொடுக்கப்படும் என, அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment