மழைக்கு முன் எங்கள் அவலத்தை தீருங்கள்-கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள்

397 0
இன்னும் சில மாதங்களில்  நிலவும் பருவமழைக்கு முன் நிம்மதியாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள் கோரியுள்ளனா்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பாடசாலையில் போதிய வகுப்பறை கட்டிடம்  இன்மையால்  தற்காலிககொட்டகை ஒன்றில்   தரம் ஒன்பது முதல் பதினொன்று வரையான மாணவா்கள் தங்களின் கல்விச் செயற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றனா்.
ஆனால் குறித்த  கொட்டகை பெருமளவு சேதமுற்று காணப்படுகிறது. குறிப்பாக கூரை பெரிதும்  சேதமுற்ற நிலையில்  தற்போது நிலவுகின்ற கடும் வெயிலுக்குள் சமாளிக்க முடியாது மாணவா்கள் சூரியனின் நகர்வுக்கு ஏற்ப இருக்கைகளை நகா்த்தி நகர்த்தி  இருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா். என  ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவி்ககின்றனா்.
இதனால் மாணவா்களால் சீராக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவும்  ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனா்.எனவே குறித்த கொட்டகையில் கல்வி கற்கும் மாணவா்கள் தங்களுக்கு நிரந்தர வகுப்பறை கட்டிடம் ஒன்றை அமைத்து தருமாறும் அதற்கு முன்னதாக பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன் இ்ந்த கொட்டகையின் கூரையினை வேய்ந்து  தங்களின் அவலத்தை தீர்க்குமாறும் கோரியுள்ளனா்.

Leave a comment