அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சி விலகுமாறு கோரிக்கை

262 0

அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சி உடனடியாக விலக வேண்டும் என தேசிய அமைப்புக்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் குணதாச அமரசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்க சபையில் இருந்து தேசிய சுதந்திர முன்னணி வெளியேறியமையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கிலே இந்த அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெறுவதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றிய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment