இரத்தப் பரிசோதனை அறிக்கையை விரைவாக வழங்க ஆலோசனை

245 0

டெங்கு நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை விரைவாக வழங்குவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கும் இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

​டெங்கு நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை தாமதித்து வழங்குவதால் டெங்கு நோயாளர்கள் மிகுந்த அசௌகரியம் அடைவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற நிலையை கருத்திற் கொண்டு சுமார் இரண்டு மணித்தியால காலத்தில் இரத்தப் பரிசோதனை அறிக்கையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தனியார் வைத்தியசாலைகளுக்கும் இரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment