அரசாங்கம் கையகப்படுத்திய நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையின் தலைவரை நியமிப்பதும், பணிப்பாளர் சபையை நியமிப்பதும் தான் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
வைத்தியசாலையை அரசாங்கம் கையகப்படுத்திய பின்னர் நெவில் பெர்ணாந்தோ தொடரந்தும் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். நெவில் பெர்ணாந்தோவின் இந்த வைத்தியசாலையை இலவசமாகவே அரசாங்கம் கையகப்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே இவ்வாறு பேசுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தரம்வாய்ந்த வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOU) என்று இன்று உருவாக்கப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பின்னால் அமைச்சர் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர், தனக்கு சங்கம் உருவாக்கவோ அல்லது கலைக்கவோ தெரியாது என்று கூறினார்.