ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

528 0

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ வீதியில் மிரிஜ்ஜவில உலர் வலய பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை இவர் உந்துருளியில் பயணித்த போது பின்னால் மேலும் ஒரு உந்துருளியில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர், ஹம்பாந்தோட்டை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment